மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தனி ஈழம் அமைய அழுத்தம் கொடுப்போம்: தமிழக ஆளுங்கட்சி அறிவிப்பு

🕔 March 17, 2021

தாம் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் தனி ஈழம் அமைவதற்கு அழுத்தம் கொடுப்போம் என, தமிழகத்தின் ஆளுங்கட்சியான அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க ) தனது ​தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் தமிழக சட்ட மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அ.இ.அ.தி.மு.கழகம் இவ்வாறு தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தமிழக சட்ட மன்றத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியுடன் தமிழக ஆளும் கட்சியான அ.இ.அ.தி.மு.கழகம் கூட்டணியமைத்து போட்டியிடுகின்றது.

இந்த நிலையிலேயே, இலங்கையில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ தனி ஈழம் அமைவதற்கு தாம் அழுத்தம் கொடுப்போம் என, அ.இ.அ.தி.மு.கழகம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பானது பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்