கல்வியற் கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ளோருக்கு நேர்முகப் பரீட்சை: அட்டாளைச்சேனையில் நடைபெற்றது

🕔 February 16, 2021

– எம்.ஜே.எம். சஜீத் –

தேசிய கல்வியற் கல்லூரிக்கு புதிதாக அனுமதிக்கப்படவுள்ள ஆசிரிய பயிலுனர்களுக்கான நேர்முகப் பரீட்சை நேற்று (15) அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயத்தில் (தேசியபாடசாலை) நடைபெற்றது.

அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி கே. புண்ணியமூர்த்தி தலைமையில் இந்த நேர்முகத் தேர்வு இடம்பெற்றது.

இதற்கமைய இஸ்லாம், கணிதம், வணிக கல்வியும் மற்றும் கணக்கீடும் ஆகிய பாடநெறிகளுக்கு நேர்முகப்பரீட்சை சுகாதார விதிமுறைகளுடன் நடைபெற்றது.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, கல்வியற் கல்லூரிகளுக்கு பயிலுநர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்