சுவதம் விருது: சாய்ந்தமருதில் 10 கலைஞர்கள் கௌரவிப்பு

🕔 January 27, 2021

– நூருல் ஹுதா உமர் –

லாசார அலுவல்கள் திணைக்களம், சாய்ந்தமருது பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச கலாசார அதிகாரசபை இணைந்து சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள கலைஞர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்த சுவதம் விருது வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் ஐ.எம். றிக்காஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எம். லத்திப் கலந்து கொண்டார்.

இதன்போது இசைத்துறை – பாடகர் ஏ.ஏ. கபூர், பாடகர் ஏ.எல்.எம். தன்சில், பொல்லடி – ஏ.எஸ். அன்வர், தற்காப்பு கலை – எம்.எஸ்.எம். பர்ஸான், நாடகத்துறை – ஏ. றனுபா, புகைப்பட துறை – ஊடகவியலாளர் எம்.ஐ. சம்சுதீன், அபிநயம் – பல்துறை கலைஞர் என்.எம். அலிகான், அறிவிப்புத்துறை – ஆசிரியர் ஏ.எல். நயீம், கவிதை – நாகூர் நஹீம், வைத்தியர் சனூஸ் காரியப்பர் ஆகிய 10 கலைஞர்களுக்கு சுவதம் விருதுகள் வழங்கப்பட்டன.

சுகாதார வழிமுறைகளை அனுசரித்து நடைபெற்ற இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் முவஃபிகா, மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ரி.எம். றிம்ஸான், சாய்ந்தமருது பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்களான ஏ.எச். சபிக்கா, ஏ. அஸ்ரப், யூ.கே.எம். றிம்ஸான் உட்பட சாய்ந்தமருது கலாச்சார அதிகாரசபை முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்