றிசாட் பதியுதீனின் பிணை மனு நிராகரிப்பு: தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

🕔 October 27, 2020

கில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீனை நொவம்பர் 10ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றச்சாட்டு ஒன்றின் பொருட்டு கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட றிசாட் பதியுதீன், அன்றைய தினம் கோட்டே நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை இன்று 27ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இன்று நீதிமன்றில் றிசாட் பதியுதீன் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை பிணையில் விடுவிக்குமாறு, அவரின் சட்டத்தரணி நீதிமன்றில் மனுவொன்றினை தாக்கல் செய்தார்.

ஆயினும் அதனை நிராகரித்த நீதவான், முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனை நொவம்பர் 10ஆம் திகதி வரை – விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்