நாடளாவிய ரீதியில் மின்தடை ஏற்பட்டமை தொடர்பான இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு; காரணமும் வெளியிடப்பட்டது

🕔 August 27, 2020

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட மின் தடைக்குக் காரணம், கெரவலப்பிட்டிய உப மின்னுற்பத்தி நிலையத்தின் பொது பராமரிப்பிற்கு பொறுப்பான அதிகாரியின் தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையை மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகபெரும அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

இந்த இடைக்கால அறிக்கையில் இடர்பாடுகளை தவிர்ப்பதற்காக நம்பகமான செயற்பாடு மற்றும் பராமரிப்பு முறைமை நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் உட்பட 11 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் கடந்த 17ஆம் திகதி மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்