கொரோனாவினால் பெண் மரணம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 12ஆக அதிகரிப்பு

🕔 August 23, 2020

நாட்டில் கொரேனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயது பெண் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து வந்த நிலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண்ணே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் புற்றுநோய் மற்றும் இருதய நோயாலும் பீடிக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் இதுவரையில் 2,947 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதாகவும் அவர்களில் 2,798 பேர் சுகமடைந்துள்ளதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிக்கிறது.

இதேவேளை உலகளவில் 02 கோடி 28 லட்சத்து 74,533 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 01 கோடி 55 லட்சத்து 27,216 பேர் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, 07 லட்சத்து 97,271 பேர் கொரோனா தொற்று காரணமாக உலகளவில் உயிரிழந்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்