அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து நௌஷாட் இடைநிறுத்தம்; கட்சி பதவிகளில் இருந்தும் நீக்கம்

🕔 August 23, 2020

ம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எம்.எம்.நௌஷாட், அக்கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் என, அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

அத்துடன், கட்சி சார்ந்து அவர் வகித்த பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

‘கட்சியின் நலன்களுக்கு எதிராகவும், நெறிமுறைகளை  மீறி செயற்பட்டமையினாலுமே அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

கடந்த பொதுத்தேர்தல் காலத்தில், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நௌஷாட்டின் பேச்சுக்களும் செயற்பாடுகளும் கட்சிக்குப் பாதகமாக அமைந்தமையினாலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கு, கட்சி யாப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே, அவர் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்’ எனவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்