பாடசாலைகள் மே 11 ஆரம்பம்; பல்கலைக்கழகங்களை திறப்பது தொடர்பில் தீர்மானமில்லை
அனைத்து பாடசாலைகளைகளையும், இரண்டாம் தவணைக்காக, மே மாதம் 11ஆம் திகதி, திங்கட்கிழமை, தொடங்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என, அரசாங்கம் அறிவித்துள்ளது.
முன்னர் – இரண்டாம் தவணை, ஏப்ரல் 20ஆம் திகதி தொடங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
கொரோனா நோய்க்கிருமிப் பரவலைத் தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டிருந்த நடவடிக்கைகளின் முதற்கட்டமாகப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இந்த விடுமுறை மாணவர்களின் பாதுகாப்பை மேலும் உறுதி செய்வதற்காகத் தற்போது நீடிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பல்கலைக்கழகங்களை மீளத் தொடங்கும் திகதி தொடர்பாக ஆராயுமாறுபல்கலைக்கழக முகாமையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினர் உயர்கல்வி அமைச்சின் மூலம் கேட்கப்பட்டுள்ளனர் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.