க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை: கல்முனை  மஹ்முத் மகளீர் கல்லூரி, மாவட்டத்தில் முதலிடம்

🕔 April 1, 2019

– எம்.என்.எம். அப்ராஸ் –

 அண்மையில் வெளியாகிய கல்விப் பொது தார சாதரண தர பரீட்சையின் பெறுபேறுகளின் படி, கல்முனை  மஹ்முத் மகளீர் கல்லூரி, மாவட்டத்தில் முதலிடம் பெற்று  கல்முனை வலயத்துக்கு பெருமை சேர்த்துள்ளது

இதன் அடிப்படையில்  மேற்படி கல்லூரியில் 17 பேர் 9A சித்திகள் பெற்றுள்ளதுடன் 13 மாணவிகள் 8A சித்திகள் பெற்றுள்ளனர். அந்த வகையில்  84.19%  பேர் உயர் தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

இச் சிறந்த பெறுபேற்றைப் பெறுவதற்கு அயராது பாடுபட்ட  முன்னாள் அதிபர்கள், உதவி, பிரதி அதிபர்கள், பகுதித்தலைவி, ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைக்கு இப் பெறுபேறு கிடைக்க ஒத்துழைப்பு  வழங்கிய  அனைவருக்கும்  தனது நன்றியினை கல்லூரி அதிபர் யூ. எல்.எம். அமீன் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்