ராஜாங்க அமைச்சர் விஜயகலாவுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு; நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகரும் தெரிவிப்பு

🕔 July 3, 2018

ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை கைதுசெய்யுமாறு, பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிங்கள ராவய அமைபு இந்த முறைப்பாட்டை செய்துள்ளது. அதில், “தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில்  உரையாற்றியுள்ளார். ஆகையால், அவரை கைதுசெய்து, சட்டத்தை நிலைநாட்ட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விடுதலை புலிகள் அமைப்பு மீண்டும் உருவாக வேண்டும் என்றும், வடக்கு கிழக்கில் புலிகளின் கைகள் ஓங்க வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய கருத்துக்ளை தெரிவித்த, ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அரசாங்க நிகழ்வொன்றில் வைத்து ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மேற்படி கருத்துக்களைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்