அரசாங்கத்திலுள்ள கழுதைகள் நாளை வெளியேற்றப்படும்: நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும

🕔 April 3, 2018

ரசாங்கத்தில் உள்ள கழுதைகள் நாளை வெளியேற்றப்படுவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று செவ்வாய்கிழமை அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்;

“அரசாங்கத்துக்குள் சிங்கத் தோல் போர்த்திய கழுதைகளும் அங்கம் வகிக்கின்றார்கள். ஒன்றிணைந்த எதிரணியினர் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து நன்மையே செய்துள்ளனர்.

இதன் மூலம் அரசாங்கத்திற்குள் சிங்கத் தோல் போர்த்தியுள்ள கழுதைகளை அடையாளம் காண முடிந்துள்ளது.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் எமக்கு மாறு வேடமிட்ட ஓர் ஆசீர்வாதமேயாகும்.

நாம் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றியீட்டுவோம் என்றும் பெரும்பான்மையில் வெற்றியீட்டுவோம். பின்னர் அரசாங்கமொன்றை அமைத்து ஆட்சி செய்வோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்