கோட்டா – மைத்திரி தரப்பு சீனாவில் சந்திப்பு

🕔 April 3, 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள்  செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சீனா சென்றுள்ள நிலையில், அங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முக்கிய ஆலோசகர்கள் சிலருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கமான ஐவர் கொண்ட குழுவொன்றையும் கோட்டாபய ராஜபக்ஷவையும் தனித்தனியாக சீன ஜனாதிபதி தனது நாட்டிற்கு அழைத்தார்.

அதன் பின்னர் இரண்டு தரப்பினரும் சந்திப்பதற்கும் சீனா ஏற்பாடுகளை செய்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்துரலி ரத்தின தேரர் மற்றும் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க உட்பட ஐவர் கொண்ட குழுவை சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டபோதிலும் மேற்படி  இருவரும் சீனா செல்லவில்லை.

மார்ச் 28 ஆம் திகதி சீனாவிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரியின் ஆலோசகர் சிரால் லக்திலக தலைமையிலான குழுவினர் அங்கு கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.

இருதரப்பும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் குறித்த விபரங்கள் வெளியாகாதபோதிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் பொது எதிரணிக்கும் இடையில்  இணக்கப்பாட்டினை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருக்கலாம்  என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்