03 கிலோ தங்க நகைகளுடன் மட்டக்களப்பு நபர் சிக்கினார்

🕔 March 23, 2018

மூன்று கிலோகிராம் எடையுடைய தங்க நகைகளை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த நபரொருவரை, விமான நிலைய சுங்கத் திணைக்களத்தினர் இன்று வெள்ளிக்கிழமை காலை கைது செய்ததோடு, தங்க நகைகளையும் கைப்பற்றினர்.

சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலம் வருகை தந்த மேற்படி நபரின் பயணப் பையிலிருந்து, இந்த தங்க நகைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே, மேற்படி தங்க நகைகளை நாட்டுக்குள் கடத்த முற்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களின் பெறுமதி 01 கோடி 30 லட்சம் ரூபாயாகும்.

கைதான நபர், 05 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டார் என, விமான நிலைய சுங்கத் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்