கண்டி மாவட்டத்தில் கால வரையறையற்ற ஊரடங்குச் சட்டம்

🕔 March 7, 2018

ண்டி மாவட்டத்தில் கால வரையறையற்ற ஊரடங்குச் சட்த்தினை பொலிஸார் அமுல் செய்துள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ராணுவத்தினர் மற்றும் பொலிஸார் தொடர்ந்தும் அங்கு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். வன்முறையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை கடுமையாக முன்னெடுக்கப்படும் என்றும் பேச்சாளர் தெரிவித்தார்.

நேற்றிரவும் கண்டி மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் சிங்களக் காடையர்கள் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்