தேசிய அரசாங்கம் தொடர்ந்தால், 25 பேர் தாவுவார்கள்: கம்மன்பில தெரிவிப்பு

🕔 February 22, 2018

தேசிய அரசாங்கம் தொடருமாயின் அரசாங்கத்திலுள்ள சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தாமரை மொட்டுச் சின்னத்தைக் கொண்ட – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து விடுவார்கள் என, பிவித்ரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

தேசிய அரசாங்கத்தின் தற்போதைய நிலை குறித்து, நாடாளுமன்றில் பிரதமர் தெரிவித்த கருத்துக் குறித்தும் இதன்போது கம்மன் பேசினார்.

ஒரு தேசிய அரசாங்கம் நிறுவப்பட்டுள்ளதாக சொல்ல முடியாது. மேலும் தேசிய அரசாங்கத்தினை உருவாக்கியுள்ள தரப்பினர் குறித்தும், அதன் கால எல்லை தொடர்பிலும் சம்பந்தப்பட்டவர்கள் எழுத்து மூலம் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்