முஸ்லிம் சமூகத்தின் கழுத்தறுக்கப்பட்ட, காமத்தின் பலிபீடம்: குமாரி கூரேயின் மற்றுமாரு சாட்சியம்

🕔 January 20, 2018

– புதிது ஆசிரியர் பீடம் –

“முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றுக் கொடுத்து, தன்னை நாடாளுமன்றம் அழைத்துப் போவதாக மு.கா. தலைவர் என்னிடம் கூறினார்”  என்று, அவரின் ஆசை நாயகியாக அறியப்பட்ட குமாரி கூரே சொல்லும் சாட்சியத்தினை அடுத்ததாக, இங்கு பதிவிடுகின்றோம்.

முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை, தனி மனிதர் ஒருவர், தனது காமத்தைத் தீர்த்துக் கொள்வதற்காகப் பயன்படுத்தியுள்ளார் என்பது மிகவும் துயரமான செய்தியாகும்.

ஒரு சமூகத்தின் அரசியல் நிறுவனத்தை, தனது ஆசை நாயகியிடம் மு.கா தலைவர் அடகு வைத்திருந்தார் என்பதை, சம்பந்தப்பட்ட பெண்ணே சாட்சியமாகக் கூறுகிறார் என்பது கவனத்துக்குரியது.

மு.காங்கிரஸ் என்பது – முஸ்லிம் சமூகத்தின் ரத்தம், வியர்வை, உழைப்பு, பிரார்த்தனை போன்றவற்றிலிருநது முளைத்தெழுந்த கட்சியாகும். அதனை இவ்வாறு, தனது காமப் பசிக்கு அடகு வைத்தமையானது, ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கும் செய்த பெரும் துரோகமாகும்.

குமாரி மீதான காதலாலும், அவரை நாடாளுமன்றத்திலும் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்கிற ஆசையினாலுமே, குமாரியை மு.கா. தலைவர் நாடாளுமன்ற உறுப்பினராக்க ஆசைப்பட்டார் என்று, அவரின் ஆசை நாயகியே வெட்கத்துடன் கூறுவதைப் பாருங்கள்.

ஒரு சமூகம் தொடர்ந்தும் ஏமாற்றப்படக் கூடாது என்கிற பொறுப்புணர்வுடன், அந்த சாட்சியத்தை இங்கு பதிவிடுகின்றோம்.

முன்னைய சாட்சியத்தைக் காண: கண்ணை மறைத்த காமம்; மு.கா. தலைவரின் சமூக துரோகம் குறித்து, குமாரி கூரே வாக்கு மூலம்

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்