இலுக்குச்சேனை மக்களின் முப்பது வருட குடிநீர் பிரச்சினைக்கு, அமைச்சர் ஹக்கீம் தீர்வு

🕔 July 28, 2015

Hakeem - ilukkuchenai  - 02
க்கரைப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட இலுக்குச்சேனை பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் நலன் கருதி,  நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் குடிநீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக அமைக்கப்பட்ட குடிநீர்க் குழாய்களை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் நேற்று திங்கள்கிழமை, பாவனையாளர்களிடம் கையளித்தார்.

இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள், சுத்தமான குடிநீரின்றி 30 வருடங்களாக அவதிப்பட்டு வந்தனர். இந்த விடயம் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, அவர் அம்மக்களுக்கு குடிநீர் வசதியை வழங்கி அவர்களின் அவலநிலைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

சுத்தமான குடிநீர் இன்மையால் தாம் 30 வருடங்களாக, பல நோய்களுக்கு உள்ளாகியதாகவும் தற்போது அதிலிருந்து விடுபட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறியதோடு அமைச்சருக்கு நன்றிகளையும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் கட்சியின் செயலாளர் நாயகமும், ராஜாங்க அமைச்சருமான எம்.ரீ.ஹஸனலி, கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல். அப்துல் மஜீத், அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரவரும், இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் செயலாற்றுப் பணிப்பாளருமான ஹனீபா மதனி, அமைச்சர் ஹக்கீமின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் ஜெ.என். கரீம், திட்டமுகாமையாளர் (ஜெய்க்கா) பொறியியலாளர் எம்.எம். நசீர் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.Hakeem - ilukkuchenai  - 05Hakeem - ilukkuchenai  - 03Hakeem - ilukkuchenai  - 04Hakeem - ilukkuchenai  - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்