சம்மாந்துறை வைத்தியசாலை தொடர்பில், அமைச்சர் ராஜிதவுடன் கலந்துரையாடல்

🕔 June 18, 2015

Rajitha - Disc - 01– எம்.சி. அன்சார் –

ம்­மாந்­துறை ஆதார வைத்­தி­ய­சா­லையை – மத்­திய அர­சாங்­கத்தின் கீழ் கொண்டு வந்து அபிவிருத்தி செய்வது தொடர்பாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்னவுடன்  உயர் மட்டக்கலந்துரையாடலொன்று நேற்று புதன்கிழமை சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக்கட்சியின் சம்மாந்துறைத் தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ. ஹஸன் அலியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ஏ. இஸ்ஸதீன், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியேட்சகர் டொக்டர் எம்.எஸ்.ஏ. அஸீஸ், ஓய்வுபெற்ற வைத்திய அதிகாரியும் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் தலைவருமான எம்.வை.எம். முஸ்தபா மற்றும் வைத்திய அதிகாரி எம்.எஸ்.எம். ரஷீத் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையானது 93 வருடங்கள் பழமை வாய்ந்தாகும். இது 1982 ஆம் ஆண்டு மாவட்ட வைத்தியசாலையாகவும், 2007 ஆம் ஆண்டு ஆதார வைத்தியசாலையாகவும் தரமுயர்த்தப்பட்டது. சம்மாந்துறை, நாவிதன்வெளி, காரைதீவு போன்ற  பிரதேசங்களுக்குட்பட்ட 01 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் – சிகிச்சை பெற்றுவரும், பிரதான வைத்தியசாலையாகக் காணப்படுகிறது. தற்­போது இவ் வைத்­தி­ய­சா­லையில் தினமும் வெளி­நோ­யாளர் பிரிவில் 700 தொடக்கம் 800 நோயா­ளர்கள் சிகிச்சை பெற்று வரு­கின்­றனர்.

இப்­பி­ர­தேச மக்கள் அவ­சர சிகிச்­சைக்­காக அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு போன்ற தூரப் பிரதேச வைத்­தி­ய­சா­லைகளுக்கே செல்ல வேண்டி­யுள்­ளதால், பல்வேறு சிர­மங்­க­ளை மக்கள் எதிர் கொண்டு வருகின்­றனர். மாகாண சபை நிர்வாகத்தில் இயங்கிவரும் இவ் வைத்தியசாலையானது வளப்பற்றாக் குறையுடனும், ஆளணி போதாமையுடனும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது. இதனால். பொது­மக்­க­ளுக்கு சீராக சிகிச்சையளிக்க முடி­யாத நிலைமை உள்ளமையினால்,  இவ் வைத்தியசாலையை – மத்திய அரசின் கீழ் கொண்டு வர வேண்டுமென்ற அவசியத்தை, வைத்திய அதிகாரிகள் குழுவினர் சுகாதார அமைச்சர் ராஜித சேனரத்னவிடம் விரிவாக விளக்கிக் கூறினர்.

இதன்போது அமைச்சர் ராஜித சேனாரத்ன கருத்துத் தெரிவிக்கையில்;

”அதிகாரப் பரவலாக்கத்திற்கு நான்  என்றும் ஆதரவளிப்பவன். மாகாண சபையின் கீழ் இயங்கிவரும் வைத்தியசாலையை, உடனடியாக மத்திய அரசாங்கத்தின் கீழ்  என்னால்  கொண்டுவர முடியாது. வைத்தியசாலையின் ஆளணி, வளப்­பற்­றாக்­ கு­றை­கள் மற்றும் உடனடித் தேவைகளையும் தீர்த்துத்தர எப்பொதும் தயாரகவுள்ளேன். அதற்கான உத்தேச அறிக்கைகளை சமர்ப்பித்தால் – நிதியினை சுகாதார அமைச்சினூடாக ஒதுக்கீடு செய்வதற்கு தயாராகவுள்ளேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்