பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்; 08 மாதங்களாகியும் பிணையில்லை

🕔 June 22, 2016

pillayan - 00874கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திர காந்தனின் விளக்க மறியல் காலம் இன்றுடன் நிறைவடைகின்றமையினை அடுத்து, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் அவர் இன்று புதன்கிழமை ஆஜர் செய்யப்பட்டார்.

இதன்போது, அவரை எதிர்வரும் ஜூலை மாதம் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராசா உத்தரவிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில், நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில், சந்திரகாந்தனை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 11.10.2015 திகதியன்று கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்