அக்கரைப்பற்றும், அதாஉல்லாவும்; தவம் என்கிற கோட்சேயின் தம்பியும் 0
– முல்லக்காரன் – அட்டாளைச்சேனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அபிவிருத்தி மழையோடு குடைபிடித்த கூட்டம் எல்லோரது கவனத்தையும் ஈர்ந்துள்ளது. கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.தவம் ஆற்றிய உரை, கல் நெஞ்சு படைத்தவர்களின் உள்ளங்களையும் கரைய வைத்திருக்கும்.“அதாஉல்லா நீண்டகாலமாக நோயாளியாக இருப்பவர். அவருடை நோய்க்குப் பாவிக்கும் குளிசைகள் அவரைப் பைத்தியமாக்கி விட்டது.