அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள அன்சில் தீர்மானம் 0
– மப்றூக் – அட்டாளைசச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், தனது உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார். இதேவேளை, நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அட்டாளைச்சேனை பிரதேச சபையின் மூன்றாவது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அன்சில்; “இது எனது இறுதி அமர்வாகும்” எனத்