பணியிடங்களில் பாலியல் லஞ்சம் கோருவது, ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தில் உள்ளடக்கம்: நீதிமைச்சர் தெரிவிப்பு 0
பணியிடங்களில் பாலியல் லஞ்சம் கோரப்படுவது தண்டனைக்குரிய குற்றமாக – உத்தேச ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று (21) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உத்தேச ஊழல் தடுப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நீதியமைச்சர்; பணிபுரியும் இடங்களில் ஆண்களிடமிருந்தே பெண்கள் அதிகளவில் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டார்.