தலைப்புச் செய்திகள்

மொஜ்தபா கொமெய்னியின் கதை 90 வீதம் முடிந்து விட்டது: ட்ரம்ப்

ரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கொமேனியும் டதை 90 சதவீதம் முடிந்து விட்டது என்று அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களில், அந்நாடு தனது ராணுவத் திறன்களையும் உயர்மட்டத் தளபதிகளையும் இறந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

“அவர்களிடம் கடற்படை இல்லை, விமானப்படை இல்லை, அனைத்தும் அழிந்துவிட்டன. அவர்களின் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் அழிந்துவிட்டன, அவர்களின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டனர், அவர்களின் சிறந்த தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர்” என்று ஃபொக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

“அவர்கள் போய்விட்டார்கள். கொமெய்னி போய்விட்டார்,” என அவர் மேலும் கூறினார்.

பெப்ரவரி 28 அன்று போரின் முதல் நாளிலேயே கொல்லப்பட்ட ஆயத்துல்லா அலி கொமெய்னியைக் குறிப்பிடுவதாக நினைத்துக் கொண்டு, ருஹுல்லா கொமெய்னியின் பெயரை ட்ரம்ப் குறிப்பிட்டார்.

“அவருடைய மகன் 90 சதவீதம் இறந்துவிட்டார்” என்றும் அவர் மேலும் கூறினார்.

பெப்ரவரி 28 முதல் மொஜ்தபா கொமெய்னி பொதுவெளியில் காணப்படவில்லை. அன்றுதான், அவரது தந்தையையும் கொன்ற அதே அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் அவரும் காயமடைந்தார். அவரது தொடர்ச்சியான இந்த மறைவு, அவரது உடல்நிலை மற்றும் இருப்பிடம் குறித்துப் பொதுமக்களிடையே குறிப்பிடத்தக்க யூகங்களைத் தூண்டியுள்ளது.

போர் பல மாதங்களாக நீடித்த போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில், அமெரிக்காவும் ஈரானும் மீண்டும் தாக்குதல்களில் ஈடுபடும் போது அவர் இந்த விடயங்களை கூறியுள்ளார்.

ஈரானிய இலக்குகள் மீது பல சுற்றுத் தாக்குதல்களை நடத்த உத்தரவிட்ட அமெரிக்க ஜனாதிபதி, ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை கடந்த வாரம் மீண்டும் தொடங்கப்பட்டதாக கொங்கிரசுக்கு முறையாக அறிவித்துள்ளார்.