தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதியின் படத்தைக் கொண்ட போலி பணத் தாளை பரப்பியவர் கைது

னாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் படத்தைக் கொண்ட போலியான 5000 ரூபாய் பணத்தாளை சமூக ஊடகங்களில் பரப்பியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை – குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

38 வயதுடைய சந்தேக நபர் செவ்வாய்க்கிழமை (04) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதானவர் அதுருகிரிய – கொரத்தோட்ட பிரதேசத்தில் வசிப்பவர் என்றும், அவர் விற்பனையாளராக பணிபுரிபவர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.