எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும்: ஜனாதிபதி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவுத் திட்டத்தில், அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படும் என, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்
நுவரெலியாவில் இன்று (03) நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார்.
மேலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கூலி தொடர்பிலும் உரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
“மே தினத்தில் கூறியபடி, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் நாளாந்த வேதனம் பெற்றுக் கொடுக்கப்படவில்லை.
எனவே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான வேதனம் ஒன்றைப் பெற்றுக்கொடுக்கத் தேசிய மக்கள் சக்தி தயாராக உள்ளது” எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.