ஒவ்வொரு மணித்தியாலமும் ஒருவர் ஓர் அங்கத்தை இழக்கிறார்: நீரிழிவு குறித்து எச்சரிக்கை

🕔 November 3, 2024

லங்கையின் நகர்ப்புற மக்களில் 23 வீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவிக்கின்றன.

நகர்ப்புற மக்களில் 30 வீதமானோருக்கு நீரிழிவு நோய்க்கு முந்தைய அறிகுறிகளைக் காட்டுவதாகவும் பொது சுகாதார நிபுணர் டொக்டர் சாந்தி குணவர்தன கூறியுள்ளார்.

இலங்கையில் நீரிழிவு நோயாளிகளின் மொத்த சதவீதம் 14% ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நீரிழிவு நோயினால் இலங்கையில் ஒருவருக்கு – ஒவ்வொரு மணித்தியாலமும் ஒரு அங்கம் இழக்கப்படுவதாகவும் டொக்டர் சாந்தி குணவர்தன மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்