தலைப்புச் செய்திகள்

36 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா சிக்கியது: சந்தேக நபர்கள் தப்பியோட்டம்

யாழ்ப்பாணம் மணல்காடு பகுதியில் 36 மில்லியன் ரூபா பெறுமதியான 104 கிலோகிராம் கேரள கஞ்சாவை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இன்று (30) கைப்பற்றியுள்ளனர்.

ராணுவ புலனாய்வு அதிகாரிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ரகசியமான முறையில் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனை நடத்தப்பட்டபோது சந்தேக நபர்கள் கஞ்சாவை கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என, பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.