சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரி செயற்படுதற்கான தடை நீடிப்பு

🕔 April 18, 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு – எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (18) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு, இன்று மீண்டும் அழைக்கப்பட்ட போதே  மைத்திரிபால சிறிசேனவுக்கான தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

தொடர்பான செய்தி: சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்பட மைத்திரிக்கு தடை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்