கோட்டா ஏமாற்றினார்: பேராயர் மல்கம் ரஞ்சித்

🕔 April 18, 2024

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வாக்குறுதியினால் தான் ஏமாற்றப்பட்டதாக, கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். 

ஊடகவியலாளர்கள் சந்திப்பில் நேற்று (17) கலந்து கொண்டு பேசிய போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.

“அவர் ஆட்சிக்கு வந்த பின்னர், ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எனக்கும் பேராயர் சபைக்கும் வாக்குறுதியளித்தார்”. 

ஆயினும், ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கிடைத்த பின்னர், அது தொடர்பான அனைத்து விசாரணைகளும் கைவிடப்பட்டதாக பேராயர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்