மைத்திரி சிஐடியில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (25) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) முன்னிலையாகியுள்ளார்.
ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி யார் என்பது தனக்கு தெரியும் என – முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அண்மையில் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
நீதிமன்றம் உத்தரவிடுமாயின் குறித்த தகவல்களை தான் ரகசியமாக நீதிபதிகளிடம் வழங்க தயாரெனவும் அவர் அதன்போJ குறிப்பிட்டார்.
இதனையடுத்து அவரிடம் குறித்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக சிஐடி அழைத்திருந்தது.
தொடர்பான செய்தி: சிஐடிக்கு வருமாறு மைத்திரிக்கு அழைப்பு