Back to homepage

Tag "முன்னாள் ஜனாதிபதி"

ஈஸ்டர் தினத் தாக்குதலின் சூத்திரதாரி இந்தியா: சிஐடி யிடம் மைத்திரி பரப்பு வாக்குமூலம்

ஈஸ்டர் தினத் தாக்குதலின் சூத்திரதாரி இந்தியா: சிஐடி யிடம் மைத்திரி பரப்பு வாக்குமூலம் 0

🕔27.Mar 2024

இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இந்தியாவும் அதன் உளவுத் துறையும் இருந்ததாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (சிஐடி) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார் என்று – உயர் மட்ட பாதுகாப்பு வட்டாரங்கள் தமக்குத் தெரிவித்ததாக ‘தமிழன்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஈஸ்டர் தின தாக்குதலின் சூத்திரதாரி யார் என தனக்குத்

மேலும்...
மைத்திரி சிஐடியில் முன்னிலை

மைத்திரி சிஐடியில் முன்னிலை 0

🕔25.Mar 2024

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (25) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) முன்னிலையாகியுள்ளார். ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி யார் என்பது தனக்கு தெரியும் என – முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அண்மையில் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். நீதிமன்றம் உத்தரவிடுமாயின் குறித்த தகவல்களை தான் ரகசியமாக நீதிபதிகளிடம் வழங்க தயாரெனவும் அவர்

மேலும்...
கோட்டாவின் உடற்பயிற்சி ஆலோசகர் கைது

கோட்டாவின் உடற்பயிற்சி ஆலோசகர் கைது 0

🕔19.Mar 2024

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உடற்பயிற்சி ஆலோசகராக பணியாற்றிய முன்னாள் ராணுவ அதிகாரி, போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கோட்டாபய ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில், அவரின் உடற்பயிற்சி ஆலோசகர்களில் ஒருவராக பணியாற்றி வந்த முன்னாள் ராணுவ லான்ஸ் கோப்ரல் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். கண்டியில் வைத்து குறித்த முன்னாள் ராணுவ உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு சார்பாக, அவரே எடுத்த அமைச்சரவைத் தீர்மானம்: ரத்துச் செய்தது உச்ச நீதிமன்றம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு சார்பாக, அவரே எடுத்த அமைச்சரவைத் தீர்மானம்: ரத்துச் செய்தது உச்ச நீதிமன்றம் 0

🕔29.Feb 2024

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பதவியில் இருந்து வெளியேறிய பின்னரும் கொழும்பு 07 பேஜெட் வீதியிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்குவதற்கு அனுமதி வழங்கிய அமைச்சரவை தீர்மானத்தை உச்ச நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (29) ரத்து செய்துள்ளது. அதன்படி 2019 ஒக்டோபர் 15 ஆம் திகதி இது தொடர்பில் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தை செல்லுபடியற்ற வகையில்

மேலும்...
சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா ஹெலிகொப்டர் விபத்தில் மரணம்

சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா ஹெலிகொப்டர் விபத்தில் மரணம் 0

🕔7.Feb 2024

சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா, ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அவரின் அலுவலகம் அறிவித்துள்ளது. “சிலி குடியரசின் முன்னாள் ஜனாதிபதியின் மரணத்தை நாங்கள் ஆழ்ந்த வருத்தத்துடன் அறிவிக்கிறோம்,” என்று நேற்று செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டு தடவை சிலியின் ஜனாதிபதிபதியாகப் பதவி வகித்த செபஸ்டியன் பினேரா இறக்கும் போது – அவருக்கு

மேலும்...
காணாமல் போன தங்கக் குதிரை, தனக்குக் கிடைத்த ரத்தினம் பதித்த வாள்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வெளியிட்ட தகவல்கள்

காணாமல் போன தங்கக் குதிரை, தனக்குக் கிடைத்த ரத்தினம் பதித்த வாள்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வெளியிட்ட தகவல்கள் 0

🕔25.Jan 2024

தனது மகள் வீட்டில் அண்மையில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு குதிரை காணாமல் போனதாக வெளியான செய்தி பொய் என, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனது மூத்த மகளின் வீட்டில் தங்கக் குதிரை இருந்ததாகக் கூறப்படும் கதை பொய் என்றும், அந்த வீட்டில் உணவும், பானமும் மாத்திரமே திருடப்பட்டுள்ளதாகவும் அவர்

மேலும்...
மைத்திரியின் மகள் வீட்டில் திருட்டு: 30 லட்சம் ரூபாய் இழப்பு என முறைப்பாடு

மைத்திரியின் மகள் வீட்டில் திருட்டு: 30 லட்சம் ரூபாய் இழப்பு என முறைப்பாடு 0

🕔23.Jan 2024

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளுக்குச் சொந்தமான பத்தரமுல்ல விக்கிரமசிங்கபுரத்திலுள்ள வீட்டில் சுமார் 03 மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். 150,000 ரூபாய் பணம், தங்க முலாம் பூசப்பட்ட ஒட்டகச் சிலை, ஸ்மார்ட் கடிகாரம் மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட 08 சிங்கப்பூர் நாணயங்கள் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளன.

மேலும்...
இலங்கைக்கு புதிய தலைவர் தேவை: மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

இலங்கைக்கு புதிய தலைவர் தேவை: மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு 0

🕔5.Oct 2023

இலங்கைக்கு புதிய தலைவர் தேவை என – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ என, ஊடகவியலாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார். “நீங்கள் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க விரும்புகிறீர்களா?” என, இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்டபோது, “இல்லை. நான் ஆட்சி செய்தது போதும் என்று நினைக்கிறேன். முன்னோக்கிச் செல்வதற்கு புதிய தலைமை தேவை” என, அவர் கூறினார்.

மேலும்...
இரண்டாவது தடவையாகவும் மைத்திரியின் வாகனம் மீது விழுந்த சாவடிக் கதவு: விசாரணைகள் ஆரம்பம்

இரண்டாவது தடவையாகவும் மைத்திரியின் வாகனம் மீது விழுந்த சாவடிக் கதவு: விசாரணைகள் ஆரம்பம் 0

🕔5.Oct 2023

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த வாகனத்தின் மீது நேற்று (04) காலை மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகல் வாயில் சாவடி கதவு விழுந்த சம்பவம் தொடர்பில், அதி பிரமுகர் பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதியின் கார் மீது வாயில் சாவடிக் கதவு விழுந்து விபத்துக்குள்ளானமைஇது இரண்டாவது சந்தர்ப்பம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு

மேலும்...
சேனல் 4 ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டா பதில்

சேனல் 4 ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டா பதில் 0

🕔7.Sep 2023

பிரித்தானியாவின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப் படத்தில், தன்னைத் தொடர்புபடுத்தி முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக சேனல் 4 தொலைக்காட்சியில் ‘ஸ்ரீலங்காஸ் ஈஸ்டர் போம்பிங் டிஸ்பெச்சஸ்’ என்ற பெயரில் இலங்கை நேரப்படி – நேற்று முன்தினம் அதிகாலை 3.35 அளவில் ஆவணப் படம்

மேலும்...
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அங்கீகரிக்கப்படாத சலுகைகள் வழங்கப்படுகிறதா: சிரேஷ்ட அதிகாரி விளக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அங்கீகரிக்கப்படாத சலுகைகள் வழங்கப்படுகிறதா: சிரேஷ்ட அதிகாரி விளக்கம் 0

🕔26.Jul 2023

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்படும் சில சலுகைகள் அங்கீகரிக்கப்படாதவை என்பதால் அவை நிறுத்தப்பட வேண்டும் எனும் செய்திகள் வெளியாகியுள்ளதை அடுத்து, இந்த விடயம் கணக்காய்வு மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதோடு – நீதித்துறையும் இதுதொடர்பில் தீர்ப்பளிக்க வேண்டும் என, ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. “அவ்வாறானதொரு விடயம்

மேலும்...
10 கோடியை இன்றும் செலுத்தாத முன்னாள் ஜனாதிபதி மைத்திரி: நீதிமன்றம் வழங்கிய அவகாசம் நிறைவுக்கு வருகிறது

10 கோடியை இன்றும் செலுத்தாத முன்னாள் ஜனாதிபதி மைத்திரி: நீதிமன்றம் வழங்கிய அவகாசம் நிறைவுக்கு வருகிறது 0

🕔9.Jul 2023

ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எதிர்வரும்12ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. போதிய புலனாய்வு தகவல் கிடைத்திருந்தும் தாக்குதலை தடுக்க தவறியதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சரின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ, முன்னாள் பொலிஸ் மா

மேலும்...
அலி சப்ரியின் இடத்தைப் ‘பிடித்த’ கோட்டா

அலி சப்ரியின் இடத்தைப் ‘பிடித்த’ கோட்டா 0

🕔5.Jun 2023

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வசித்து வந்த அரச இல்லத்திலிருந்து, அவர் வேறொரு இடத்துக்கு தற்போது குடிபெயர்ந்துள்ளார். இவ்வாறு அவர் வெளியேறிய வீடு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசித்த இடமாகும். மலலசேகர மாவத்தையில் தான் வசித்த வீடு அமைந்துள்ள பகுதியில் அதிக சத்தம் உள்ளதாகத் தெரிவித்தே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிய இடத்துக்குச்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான நஷ்டஈட்டை வழங்க நண்பர்களிடம் பணம் வசூலித்து வருகிறேன்: மைத்திரிபால சிறிசேன

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான நஷ்டஈட்டை வழங்க நண்பர்களிடம் பணம் வசூலித்து வருகிறேன்: மைத்திரிபால சிறிசேன 0

🕔26.Mar 2023

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கின் தீர்ப்பு தொடர்பான நட்டஈட்டை வழங்குவதற்காக, தன்னால் முடிந்தவரை தனது நண்பர்களிடம் பணம் வசூலித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பத்தேகமவில் இன்று (மார்ச் 26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, உரிய நட்டஈட்டை வழங்க இன்னும் மூன்று மாதங்களே உள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும்...
நாட்டை நாசமாக்கிய கோட்டாவுக்கு அரச செலவில் சுகபோக வாழ்க்கை: வாகன செலவுகளுக்கு மட்டும் 20 லட்சம் ஒதுக்கீடு

நாட்டை நாசமாக்கிய கோட்டாவுக்கு அரச செலவில் சுகபோக வாழ்க்கை: வாகன செலவுகளுக்கு மட்டும் 20 லட்சம் ஒதுக்கீடு 0

🕔2.Feb 2023

நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு – மக்கள் கடும் திண்டாட்டத்தில் உள்ள நிலையில், அரச செலவினங்களைக் கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற போதிலும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஒதுக்கீடுகள் அதிகரித்துள்ளதாக ‘டெய்லி மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், நாட்டிலிருந்து தப்பியோடி தனது பதவியிலிருந்து ராஜிநாமா செய்த – முன்னாள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்