மத்திய வங்கி ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை ரத்துச் செய்யும் சட்டமூலம் சமர்ப்பிப்பு

🕔 March 13, 2024

லங்கை மத்திய வங்கி ஊழியர்களின் அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளத்தை ரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, நாடளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹங்ச அபேரத்னவிடம் கையளித்துள்ளார்.

இன்று (13) கையளிக்கப்பட்டுள்ள குறித்த சட்டமூலத்தில், மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் நிதியமைச்சரின் இணக்கப்பாட்டைப் பெறுவதை கட்டாயமாக்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கி சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம், சட்டமா அதிபரின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படும் என – நாடாளுமன்ற பதில் செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்