தென் மாகாண முதலமைச்சருக்கு முன் பிணை

🕔 February 5, 2016

Shan wijeyalala de silva - 012தென் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வாவை, முன் பிணையில் விடுவிக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த தென் மாகாண முதலமைச்சர் இன்று நீதிமன்றில் ஆஜரானார்.

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகமை காரணமாக, தென் மாகாண முதலமைச்சருக்கு எதிராக நீதவான் நிலுபுலி லங்காபுர நேற்று முன்தினம் பிடியாணை பிறப்பித்திருந்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களை அச்சுறுத்தியதாக அக்மீமன பொலிஸார், தென் மாகாண முதலமைச்சருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

முதலமைச்சர் வெளிநாடு சென்றிருந்தமையினால், அவருக்கு நீதிமன்றில் ஆஜராக முடியவில்லை என்று நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டமையினை அடுத்து,  நீதவான் முதலமைச்சரை முன் பிணையில் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்