பிள்ளைகளை குப்பி விளக்கில் படிக்குமாறு கூறிய, மின்சார சபையின் பேச்சாளர் ராஜிநாமா

🕔 February 22, 2024

லங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இவர் வௌயிட்ட கருத்து தொடர்பில் – சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டமையை அடுத்து அவர் பதவி விலகியுள்ளார்.

அதேநேரம் இந்த கருத்துக்காக அமைச்சு மற்றும் இலங்கை மின்சாரசபை ஆகிய இரு தரப்புக்காகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மன்னிப்பு கோரியுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நோயல் பிரியந்த, ”தேவைப்பட்டால் எண்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தி பிள்ளைகள் படிக்க வேண்டும்” என்று கூறியமை சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதேபோன்ற நிலைமைகளின் கீழ் படிப்பில் சிறந்து விளங்கிய முந்தைய தலைமுறையினரின் முன்மாதிரியை அவர் தனது கருத்தின்போது மேற்கோள் காட்டியிருந்தார்.

எனினும் விமர்சனங்களைத் தொடர்ந்து, பேச்சாளர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதோடு, தனது கருத்துக்கு பகிரங்க மன்னிப்பையும் கோரியுள்ளார்.

இதேவேளை குறித்த கருத்து தொடர்பில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்