தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ‘ட்ரோன் தொழில்நுட்பம்’ தொடர்பான செயலமர்வு

🕔 February 14, 2024

ல்கலைக்கழக அறிவுசார் வளங்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி திட்டத்தின்கீழ், களனி பல்கலைக்கழக புவியல்துறை மாணவர்களுக்கு ‘ட்ரோன் தொழில்நுட்பம் (Drone Technology) பயன்பாடு மற்றும் தொழில்நுட்பம்’ தொடர்பான செயலமர்வு, இன்று (14) தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் புவியல்துறை திணைக்களத்தின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கே. நிஜாமிர் தலைமையில் இடம்பெற்றது.

பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் – வழிகாட்டலில் இடம்பெற்ற குறித்த செயலமைவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில், பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் கலந்து கொண்டார்.

இதில், களனி பல்கலைக்கழக சமூக விஞ்ஞான பீடத்தின் புவியல்துறை தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் லால் மர்வின் தர்மசிறி, பேராசிரியர் ஏ.ஜி. அமரசிங்க உள்ளிட்ட சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக புவியல்துறை திணைக்களத்தின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கே. நிஜாமிர் உள்ளிட்ட விரிவுரையாளர்கள் களனி பல்கலைக்கழக புவியல்துறை மாணவர்களுக்கு இதன்போது விரிவான செயல்முறை பயிற்சிகளையும் விரிவுரைகளையும் வழங்கினர்.

களனி பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் வருகையை மகிழ்விக்க, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது.

நிகழ்வில் -சிரேஷ்ட பேராசிரியர் எம்.ஐ.எம். கலீல், சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எல். பௌசுல் அமீர், கலாநிதி றபீகா அமீர்டீன், சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எச். முகம்மட் றினோஸ், விரிவுரையாளர் ஐ.எல். முகம்மட் சாஹிர், விரிவுரையாளர் ஏ.எல். ஐயூப், விரிவுரையாளர் எம்.என். நுஸ்கா பானு, விரிவுரையாளர் எம்.எச். பாத்திமா நுஸ்கியா மற்றும் சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.ரீ. அகமட் அஷ்ஹர், கல்விசார உத்தியோகத்தர்கள் என, பலர் கலந்து கொண்டனர்.

(ஊடக பிரிவு – தென்கிழக்கு பலகலைக்கழகம்)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்