ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த விபத்தில் உயிரிழப்பு

🕔 January 25, 2024

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த (வயது 48) மற்றும் அவரின் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் – கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

இன்று (25) காலை 2.00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த வாகனம் – கட்டுநாயக்காவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, முன்னால் பயணித்துக் கொண்டிருந்த கொள்கலன் பாரவூர்தியுடன் மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த ராஜாங்க அமைச்சரும் அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த வாகன சாரதி – ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்