அம்பாறை மாவட்ட இலக்கிய விருது வழங்கும் விழா: அட்டாளைச்சேனையில்

🕔 January 9, 2024

ம்பாறை மாவட்ட ‘இலக்கிய விருது வழங்கும் விழா 2023’ – மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ரி.எம். ரின்ஸான் நெறிப்படுத்தலில், அட்டாளைச் சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ. சாபீர் தலைமையில் இன்று (09) அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டலில்,, அம்பாறை மாவட்ட செயலகம் – தமிழ் மொழிமூல 13 பிரதேச செயலகங்களுடன் இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம கலந்து கொண்டார்.

கௌரவ அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசனும், விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட நீதவான் எம்.எச்.எம். ஹம்ஸா, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிவான் டி. கருணாகரன், காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, நாவிதன்வெளி பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி, அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம். அன்ஸார், இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ. நஸீல், சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முஆபிக்கா, அம்பாறை மாவட்ட உதவி செயலாளர் டப்ளியு.வி. செனவிரத்ன மற்றும் கிழக்கின் கேடயம் தலைவர் எஸ்.எம். சபீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தில் கலாச்சார நிகழ்வுகளில் வெற்றி பெற்ற கலைஞர்கள் மற்றும் மாணவர்கள் விருது, சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் ‘சுவதம்’ விருதுகளும் வழங்கி – கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

தமிழ், முஸ்லிம் மக்களின் கலாச்சாரங்கள் பிரதிபலிக்கும் கலை, இலக்கிய நிகழ்வுகளும் இங்கு அரங்கேற்றப்பட்டன.

இதில் பிரதேச செயலகங்களின் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்விமான்கள், சிரேஷ்ட கலைஞர்கள், அரச அதிகாரிகள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்