தரை வழித் தாக்குதலில் மிகப்பெரும் இழப்பை இஸ்ரேல் நேற்றிரவு சந்தித்தது: “எதிர்பார்த்தோம்” என்கிறார் பாதுகாப்பு அமைச்சர்

🕔 November 1, 2023

காஸாவில் நேற்று (31) இரவு முழுவதும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 09 இஸ்ரேல் படையினர் கொல்லப்பட்டதாக, அந்த நாட்டு ராணுவம் உறுதி செய்துள்ளது.

காஸாவில் தரைவழித் தாக்குதலுக்குப் பிறகு – இஸ்ரேலிய ராணுவம் சந்தித்த மிகப்பெரிய எண்ணிக்கையிலான இழப்பு இதுவாகும்.

இதன் மூலம் ஒக்டோபர் 7ஆம் தேதிக்குப் பிறகு கொல்லப்பட்ட இஸ்ரேலிய ராணுவத்தினரின் எண்ணிக்கை 320க்கும் அதிகமாகும்.

காஸாவின் பல பகுதிகளில் ஹமாஸின் ராணுவப் பிரிவான கஸ்ஸாம் படையணிகள் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் போராளிகளின் எதிர்ப்பை இஸ்ரேலிய ராணுவம் சந்தித்துள்ளது.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் கூறுகையில், தாம் இவ்வாறான இழப்புகளை எதிர்பார்த்தாக குறிப்பிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்