மைத்திரியின் தீர்மானத்துக்கான இடைக்காலத் தடை நீடிப்பு

🕔 September 22, 2023

ரத் ஏக்கநாயக்க – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக செயற்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடையை மேலும் நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவியிலிருந்து தயாசிறி ஜயசேகர வெளியேற்றப்பட்டதன் பின்னர், அந்தப் பதவிக்கு சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டார்.

சுதந்திரக் கட்சியில் தனது உறுப்புரிமையை, அந்தக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன இடைநிறுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தயாசிறி ஜெயசேகர தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான, மேற்படி இடைக்காலத் தடையை ஒக்டோபர் 06 ஆம் திகதி வரை நீடித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, நீதிமன்றத்தின் தடையுத்தரவு நீடிப்பை எதிர்ப்பதாக தெரிவித்தார்.

இதனையடுத்து ஆட்சேபனைகளை அடுத்த நீதிமன்றத் தவணையின் போது தாக்கல் செய்யுமாறு உத்தரவிடப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்