போலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது

🕔 September 7, 2023

பாதுக்க பொலிஸ் பொறுப்பதிகாரி எனக் கூறி, பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து தங்கத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் சந்தேக நபரொவருவரை மொரோந்துடுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் மசாஜ் நிலையத்தில் பணிபுரிந்து வருவதோடு, முகநூல் மூலம் சந்தேக நபருடன் நட்பாக இருந்துள்ளார்.

மொறொந்துடுவையில் உள்ள தங்கும் விடுதிக்கு வந்த சந்தேக நபர், தான் பாதுக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எனக் கூறி, ‘உத்தியோகபூர்வ’ அடையாள அட்டையையும் காண்பித்துள்ளார்.

அதனையடுத்து குறித்த பெண்ணை சந்தேகநபர் துஷ்பிரயோகம் செய்து, அவளிடம் இருந்த தங்க நகையை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இது குறித்து முறைப்பாடு செய்யப்பட்டமையினை அடுத்து, சந்தேக நபரை மொறொந்துடுவ பொலிஸார் கைது செய்து, கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களையும் மீட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்