எரிக்கப்பட்ட வீடுகளுக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, மதுபான விற்பனைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு

🕔 September 7, 2023

நாட்டில் கடந்த ஆண்டு நடந்த பேராட்டத்தின்போது, தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளின் சொந்தக்காரர்களான – நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைதிப்படுத்தும் வகையில், அவர்களுக்கு மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டதாக சமகி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குற்றம் நாடாளுமன்றில் இன்று (07) குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; “வீடுகள் எரிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதுவும் செய்யப்படவில்லை. எனவே அவர்களை அமைதிப்படுத்தவே அவர்களுக்கு மதுபான விற்கனைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது”என்றார்.

எனினும், ராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார். எரிக்கப்பட்ட வீடுகளின் சொந்தக்காரர்களான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் தலைவராக நான் இருக்கிறேன். எரிக்கப்பட்ட வீடுகளின் சொந்தக்காரர்களான எந்தவொரு எம்.பி.க்கும் மதுபான விற்பனை உரிமம் வழங்கப்படவில்லை என்பதை நான் தெளிவாகக் கூறுகிறேன்” என தெரிிவித்தார்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட தன்னை சபையில் பேசவிடாமல் தடுக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி முறையிட்டுள்ளார்.

“சபையில் பேசவிடாமல் சபாநாயகர் எங்களை ஒரு பக்கத்திலிருந்து தடுக்கிறார், அதே நேரத்தில் எதிர்க்கட்சியில் உள்ளவர்களும் என்னைத் தடுக்கிறார்கள். எனவே, இந்த சூழ்நிலையில் வீட்டில் இருப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்