இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்க, மேல் நீதிமன்று உத்தரவு

🕔 August 29, 2023

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தீர்ப்பளிக்கப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளதோடு, அவுரகு்க பிணையிணையும் வழங்கியுள்ளது.

எதிர்வரும் தேசிய தேர்தலுக்கு முன்னர்- சவால்களை எதிர்கொண்டிருக்கும் இம்ரான்கானுக்கு மேல் நீதிமன்றின் இந்த முடிவு பெரும் ஆறுதலாக இருக்கும்.

அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்றார் எனும் குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வழங்கில், பாகிஸ்தான் விசாரணை நீதிமன்றம் இம்ரான் கானுக்கு இந்த மாத ஆரம்பத்தில் மூன்றாண்டுகள் சிறைச்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இதன் காரணமாக எதிர்வரும் தேசிய தேர்தலில் அவர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.

இவ்வருடம் நொவம்பர் மாதம் தேசிய தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்