நாடாளுமுன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிடியாணை

🕔 June 19, 2023

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக – கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமையினை அடுத்து, இன்று (19) இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் 06 பேருக்கு எதிராக கறுவாத்தோட்ட பொலிஸார் தாக்கல் செய்தமுறைப்பாட்டின் அடிப்படையிலான வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

2016ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இளவரசர் ஸெய்ட் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்த போது, கொழும்பு – தும்முல்லையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தைச் சுற்றியுள்ள வீதிகளை மறித்து, பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, வீரகுமார திஸாநாயக்க, பியசிறி திஸாநாயக்க, மொஹமட் முஸம்மில், ஜயந்த சமரவீர மற்றும் ரொஜர் செனவிரத்ன உள்ளிட்ட 07 பேர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்