42 ஆயிரத்துக்கு மேற்பட்ட சந்தேக நபர்களின் பட்டியல், அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் கையளிப்பு 0
நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 42,248 சந்தேக நபர்களின் விரிவான பட்டியலை – அனைத்து பொலிஸ் நிலையங்களின் குற்றங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளிடம் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கையளித்துள்ளார் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த பட்டியலிலுள்ள 35,505 திறந்த பிடியாணை உள்ளவர்கள், 4,258 சந்தேக நபர்கள் கைரேகைகள் மூலம் அடையாளம் காணப்பட்டவர்கள்.