டொக்டர் ஷாஃபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

🕔 May 16, 2023

ன்னை கைதுசெய்து தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என உத்தரவிடக் கோரி, குருணாகல் வைத்தியசாலையின் மகப்பேறு வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

நீதியரசர்களான விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இது தொடர்பான விடயங்களை நீண்ட காலம் பரிசீலித்ததன் பின்னர் இந்த முடிவை இன்று (16) வழங்கியுள்ளது.

குருணாகல் பொலிஸார் பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் பணச்சலவை சட்டத்தின் கீழ் தன்னை கைதுசெய்து தடுத்து வைப்பட்டிருந்தமை சட்டவிரோதமானது என உத்தரவிடக்கோரி டொக்டர் ஷாஃபி ஷிஹாப்தீன் இந்த அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்