சர்வதேச நாணய நிதியம் தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றில் நிறைவேற்றம்: பல்டியடித்தார் பௌசி

🕔 April 28, 2023

ர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிணங்க குறித்த தீர்மானத்துக்கு ஆதரவான 120 வாக்குகள் கிடைத்தன.

எதிரான 25 வாக்குகள் வழங்கப்பட்டன.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி, மேற்படி தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தார். கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராகப் போட்டியிடும் பொருட்டு, முஜிபுர் ரஹ்மான் ராஜிநாமா செய்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கு – பௌசி நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

இதன்படி 95 மேலதிக வாக்குகளால் மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்