பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு

🕔 January 25, 2022

பொரளை ‘ஓல் செய்ன்ட்ஸ்’ தேவாலயத்தில் அண்மையில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை விரைவில் நிறைவு செய்யுமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்றைய தினம் (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அதேநேரம், சம்பவம் தொடர்பில், தடுத்து வைத்து விசாரிக்கப்படும் சந்தேக நபர்கள் குறித்த விசாரணைகளின் முன்னேற்றத்தை, அடுத்த மாதம் 02ஆம் திகதி மன்றுக்கு அறிவிக்குமாறு நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்பான செய்தி: கைக்குண்டு விவகாரம்: அச்சுறுத்திப் பெறும் வாக்குமூலங்கள் அடிப்படையிலான முடிவை ஏற்கப் போவதில்லை: கர்தினால் மல்கம் ரஞ்சித்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்