அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு, வரி நீக்கம், சமுர்த்தி பயனாளர்களுக்கு அதிகரித்த தொகை: நிதியமைச்சர் பசில் அறிவிப்பு

🕔 January 3, 2022

த்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களுக்கான சகல வரிகளும் நீக்கப்படுவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

அத்துடன் அரச சேவையாளர்கள் மற்றும் விசேட தேவையுடைய பாதுகாப்புப் படையினர் ஆகியோருக்கு இந்த மாதம் முதல் 5,000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அதேவேளை ஓய்வூதியம் பெறுவோர் இம்மாதம் தொடக்கம் ஒரு வருட காலத்துக்கு 05 ஆயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவாக பெற்றுக் கொள்வர் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பெருந்தோட்ட துறைசார் குடும்பங்களுக்கு மாதாந்தம் ஒரு கிலோ கிராம் கோதுமை மா 80 ரூபா என்ற அடிப்படையில் 40 ரூபா நிவாரணத்துடன் 15 கிலோகிராம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

அத்துடன் சமுர்த்தி பயனாளர்களுக்கு இந்த மாதம் தொடக்கம் 1000 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

மேலும் 20 பேர்ச்சர்ஸ்க்கும் குறைவான விவசாய நிலங்களைக் கொண்டுள்ளவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

தற்போதைய நிலையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பவற்றுடன் கலந்துரையாடப்படுவதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதன்போது தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்