மத்திய கிழக்கின் 06 நாடுகளில் இருந்து வருவோருக்கு, இலங்கைக்குள் நுழையத் தடை

🕔 June 29, 2021

த்திய கிழக்கின் ஆறு நாடுகளில் இருந்து வருவோருக்கு இலங்கைக்குள் நுழைவதற்கு ஜூலை 01ஆம் திகதி முதல் தடை விதிக்கப்படவுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் ஜூலை 13 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சஊதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளிருந்து வரும் பயணிகள் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

ஆயினும் மேற்படி நாடுகளில் இருந்து வருவோர் இலங்கையில் தரையிறங்கி, வேறு நாடுகளுக்குப் பயணிக்க அனுமதிக்கப்படுவர்.

இதேவேளை ஆபிரிக்க கண்டத்தின் எட்டு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் இலங்கைக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா நிலைவரம் காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Comments