
கம்பஹா வைத்தியசாலைக்குச் சொந்தமான ‘அம்பியுலன்ஸ்’ வாகனத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பியுலன்ஸ் சேதப்படுத்தப்பட்டதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றதை அடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
அம்பியுலன்ஸ் சாரதியும் இதன்போது தாக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடவத்த – பஹலபியன்வில பகுதியைச் சேர்ந்த 65 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் நடைபெற்ற போது சந்தேக நபர் மது போதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார்.



